ஆக்ராவில் கிறிஸ்துமஸ் தாத்தா உருவ பொம்மைக்கு இந்துத்துவா அமைப்புகள் தீ வைத்து எரித்து கிறிஸ்துவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் புனித ஜான்ஸ் கல்லூரி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வந்த அந்தாராஷ்டிரிய இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரீய பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென கிறிஸ்துவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
இதுகுறித்து இந்துத்துவா கும்பல் கூறுகையில், மக்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதால் அவர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.